நேற்று (20-10-2013) விஜய் தொலைக்காட்சியில் நீயா, நானா நிகழ்ச்சி பார்த்தேன். தலைப்பு பெண்ணியம் பற்றியது...., பெண்ணியம் தேவை இல்லை என்று பேசும் ஒரு குழு....? இதில் அதிர்ச்சியான ஒரு செய்தி என்னவென்றால் இந்த குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நன்கு படித்த இளம் தலைமுறை பெண்கள்.. !!!! அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு பெண்ணியம் தேவையில்லை என்பது அவர்கள் வாதம்....
குழந்தையில் இருந்து நடுத்தர வயதை தாண்டிய பெண் முதல் இங்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது...., இன்னமும் சில கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலையை தடுக்க முடியவில்லை...? கல்வி ,திருமணத்தில் உரிமை, சொத்துரிமை முதலியன மறுக்கப்படும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.
அப்படி இருக்கும் போது சமூகத்தில் மற்ற பெண்களின் நிலைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பேசிய இந்த இளம் பெண்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது....?
ஆனால் களப்பணியாற்றும் நம் அன்பு சகோதரிகள் , குட்டி ரேவதி,ஓவியா, புதிய மாதவி, கவின் மலர், வெண்ணிலா, கவிதா. சல்மா போன்றவர்கள் மிகவும் அருமையாக பெண்ணியம் பற்றி அவர்களுக்கு புரிய வைத்தார்கள்...பாராட்டுக்கள்... !!!!
குழந்தையில் இருந்து நடுத்தர வயதை தாண்டிய பெண் முதல் இங்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது...., இன்னமும் சில கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலையை தடுக்க முடியவில்லை...? கல்வி ,திருமணத்தில் உரிமை, சொத்துரிமை முதலியன மறுக்கப்படும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.
அப்படி இருக்கும் போது சமூகத்தில் மற்ற பெண்களின் நிலைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பேசிய இந்த இளம் பெண்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது....?
ஆனால் களப்பணியாற்றும் நம் அன்பு சகோதரிகள் , குட்டி ரேவதி,ஓவியா, புதிய மாதவி, கவின் மலர், வெண்ணிலா, கவிதா. சல்மா போன்றவர்கள் மிகவும் அருமையாக பெண்ணியம் பற்றி அவர்களுக்கு புரிய வைத்தார்கள்...பாராட்டுக்கள்...