நேற்று மாலை பூங்காவில் கண்ட ஒரு காட்சி... சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ..! அப்போது ஒரு சிறுமி அழுதுக் கொண்டே வந்து தன தாயிடம் , ' அவன் என்னை அடித்து விட்டான் ' என்று முறையிட்டாள். அதற்கு அந்த தாய் யார் என்று கேட்க, அச்சிறுமி கைக்காட்டி அவன்தான் என்று சொன்னாள்... அதற்கு அங்கிருந்த மற்ற பெண்கள் , அந்த பையன் எப்போதும் அப்படி தான்.. எல்லோரையும் அடிப்பான் என்று கூறினார்கள் . உடனே அந்த தாய் தன மகளிடம், ' இனிமேல் அவனிடம் விளையாடாதே.., அவனிடம் பேசாதே ' என்று கூறுகிறார்.
இதுவே அச்சிறுவன் மற்றொரு சிறுவனை அடித்திருந்தால் அந்த சிறுவன் இப்படி தான் தன தாயிடம் வந்து முறையிடுவானா..? அல்லது அவனுடைய தாய் தான் இப்படி கூறுவார்களா..? இன்னும் சொல்லபோனால் நீயும் அடிக்க வேண்டியது தானே ... என்பது தான் பதிலாக இருக்க முடியும்..! சிறுவர்களாக இருந்தாலும், ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் வெவ்வேறு விதத்தில் வளர்க்கப் படுகிறார்கள் நம் சமூகத்தில்...! ஆண் குழந்தைகளுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், பெண் குழந்தைகளுக்கு அதை எதிர் கொள்ளாமல் ஒதுங்கி செல்வதற்கும், அல்லது அதை அனுசரித்துப் போவதற்கும் பழகப் பட்டு வளர்க்கப் படுகிறார்கள்..! முதலில் இதை தாய்மார்கள் உணர வேண்டும். நாம் வளர்ந்தது போலவே தன குழந்தைகளை வளர்க்காமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் நடக்கவும், எது சரியானது என்பதையும் சொல்லிக் கொடுப்பது மிக முக்கியம்... அப்போது தானே அந்த குழந்தை வளர்ந்தவுடன் எதையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற முடியும்..!
இதுவே அச்சிறுவன் மற்றொரு சிறுவனை அடித்திருந்தால் அந்த சிறுவன் இப்படி தான் தன தாயிடம் வந்து முறையிடுவானா..? அல்லது அவனுடைய தாய் தான் இப்படி கூறுவார்களா..? இன்னும் சொல்லபோனால் நீயும் அடிக்க வேண்டியது தானே ... என்பது தான் பதிலாக இருக்க முடியும்..! சிறுவர்களாக இருந்தாலும், ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் வெவ்வேறு விதத்தில் வளர்க்கப் படுகிறார்கள் நம் சமூகத்தில்...! ஆண் குழந்தைகளுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், பெண் குழந்தைகளுக்கு அதை எதிர் கொள்ளாமல் ஒதுங்கி செல்வதற்கும், அல்லது அதை அனுசரித்துப் போவதற்கும் பழகப் பட்டு வளர்க்கப் படுகிறார்கள்..! முதலில் இதை தாய்மார்கள் உணர வேண்டும். நாம் வளர்ந்தது போலவே தன குழந்தைகளை வளர்க்காமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் நடக்கவும், எது சரியானது என்பதையும் சொல்லிக் கொடுப்பது மிக முக்கியம்... அப்போது தானே அந்த குழந்தை வளர்ந்தவுடன் எதையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற முடியும்..!