Monday, 25 January 2016

இந்தியா பன்முக நாடு.

ஜனவரி 26, 1950,  இந்தியா சுதந்திர நாடு. இனி  எந்த நாட்டுக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதை பிரகடனப் படுத்திய நாள். இன்றுடன் 66 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகு  நாம் சாதித்தது என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அணு ஆராய்ச்சியில் முன்னேறி இருக்கிறோம்... விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி இருக்கிறோம்... கல்வியில் முன்னேறி இருக்கிறோம்... தொழிற்புரட்சியிலும் முன்னேறி இருக்கிறோம் என்பது உண்மை தான்.. ஆனால்,

இந்த அத்தனை முன்னேற்றங்களும் இந்நாட்டின் கடைகோடி மனிதன் வரை சென்று இருக்கிறதா என்றால் இல்லை என்பது தானே நிதர்சனமான  உண்மை.!

இன்றும் ஜாதி, மத கலவரங்கள், அதன் மூல்ம் கொலைகள், தற்கொலைகள் என நடந்துக் கொண்டிருக்கின்றன என்பது தானே உண்மை.!

தாழ்த்தப்பட்ட மக்கள் என பிரிக்கப்பட்ட சமூகத்தில் இன்னும்  கல்வி மறுக்கப்பட்டு, சம உரிமை மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின் தங்கி தானே உள்ளார்கள் எனபது தானே உண்மை.!

இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் ஒரு வேளை  உணவிற்கே 
தவித்துக் கொண்டு  இருக்கிறார்கள் எனபது தானே உண்மை.!

பெண்கள் இன்னமும் பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களுக்கான 33 விழுக்காடு கூட இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சம உரிமை என்பது எல்லா பெண்களுக்கும் கிடைக்கவில்லை என்பது தானே உண்மை.!

தரமான கல்வி எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைப்பது என்பது எட்டாக்கனியாக தானே இன்னமும் உள்ளது.!

மத சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு மதவாதத்தை தூண்டிக் கொண்டு தானே இருக்கிறது.! 

ஜாதியின் கொடூர பார்வையிலிருந்து  மக்கள் இன்னமும் விடப்பட்ட முடியவில்லை என்பது தானே உண்மை.!

இவைகளை எல்லாம் சரி செய்து விட்டு, ' #அனைவருக்கும்அனைத்தும் ' என்ற தந்தை பெரியாரின் கொள்கைக்கேற்ப எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் அனைத்து மக்களும் #சமஉரிமையுடன் வாழ வழிவகை செய்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம், குடியரசு பெற்ற நாடு என்ற  தகுதியை பெரும் #இந்தியா.!

  

 

Saturday, 16 January 2016

இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்...!

" இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்  புத்தாண்டு வாழ்த்துகள்...! "

 இந்நாள் உழவுக்கு உதவி செய்யும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழா. முக்கியமாக கதிரவனுக்கும், காளைக்கும் சிறப்பு செய்து, நன்றி சொல்லி ,  நம் பாரம்பரிய அறுவடை நாளை குறிக்கும் சிறப்பு விழா.
இதில் எவ்வித மத, ஜாதி சாயமேற்றாத  அனைத்து  தமிழர்களுக்குமான   திருவிழா. 

மேலும் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் தை முதல் நாள் என்பதும் ஒரு மிகப் பெரிய சிறப்பு இந்நாளுக்கு உண்டு.

எந்த நாட்காட்டியிலும், தமிழ்ப் புத்தாண்டும், திருவள்ளுவராண்டு என்பதையும் குறிப்பிட படவில்லை  என்பதை பார்க்கும் போது , இன்னமும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.

" அனைத்து தமிழர்களுக்கும்  இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்  புத்தாண்டு வாழ்த்துகள்...! "

Tuesday, 5 January 2016

மஞ்சு விரட்டு

பழங்காலத்தில் வேளாண்மைக்கு காளையை பயன்படுத்தியதினால், காளையை அடக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இப்போது டிரக்டர் பயன் படுத்தி வருகிறோம். ஆதலால் தேவை இல்லாத ஓன்று என்பது சரி தான். இருந்தாலும் இது தமிழர்களின் வீர விளையாட்டு, இந்த மறக்கவோ, விட்டுக் கொடுக்கவோ முடியாது என்பவர்கள் இதில் ஜாதியை நுழைத்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். குறுப்பிட்ட ஜாதியினர் தான் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று வரை உள்ளது. நாம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த தமிழர்களின் வீர விளையாட்டுக்காக அனைத்து ஜாதியினரும் பங்குக் கொள்ள வேண்டும் என்றும் கேட்க வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம் என்பது மிகவும் வருத்தக்குரியது.!
மேலும் இதில் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து நிறைய இருக்கிறது. இதை எல்லாம் மீறி வெல்வது தான் விளையாட்டு என்று வைத்துக் கொண்டாலும், இந்த விளையாட்டின் மூலம் நாம் பெற போகும் நன்மை தான் என்ன..?
நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மனிதன் மனிதனோடு மோதும் விளையாட்டுகள் நிறைய இருக்கின்றனவே...!

புத்தாண்டு நல் வாழ்த்துகள்...!

இந்த 2015-ஆம் ஆண்டில் நமக்கு கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சி, துயரம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மன நிறைவு அனைத்தையும், ஒரு மிகச் சிறந்த அனுபவமாக எடுத்து கொண்டு, வரும் 2016-ஆம்  ஆண்டை  வெற்றி பெறும் ஆண்டாக அமைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம். 

தோழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்  வாழ்த்துகள்...!