Thursday, 26 May 2016

பார்ப்பனீயம் உள்ளவரை திராவிட சித்தாந்தம் கட்டாய தேவை.

பாஜக மூன்று இடங்களை தவிர மற்ற இடங்களில் டெபொசிட் இழந்து விட்டது என்ற வருத்தத்தை விட தமிழ்நாட்டில் 12 இலட்சம் பேர்கள் தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறது பார்ப்பனீயம்... மேலும் அதிமுக வென்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்களுக்கு..!


ஆனால் நம்மில் பலர் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பார்ப்பனீயத்திற்கு அடிப் பணிகிறார்கள்...!
திராவிட எதிர்ப்பு என்பது நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம். தந்தை பெரியாரை படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். திராவிடத்தின் ஆற்றலையும், பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியையும் புரிய வைக்கவேண்டும்.!

எவ்விதத்திலும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை மீண்டும் கால் ஊன்ற விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.!

Monday, 23 May 2016

அழிக்கப்பட வேண்டியவைகள்.!

இந்திரன், தனது மிகுந்த  பலத்தால், வேள்வியை வெறுக்கும் தாசர்களையும், தெய்வத்தை நிந்திக்கும் தாசர்களையும் கொன்றான்.
-- (ரிக். 2771)
வேள்வி செய்யாதவர்களாகவும், தானம் கொடுக்காதவர்களாகவும், தன்னை வணங்காதவர்களாகவும், தேவனற்றவர்களாகவும் உள்ள தாசர்களை கொல்லுகின்றவன் எவனோ,  அவன் இந்திரன்.!
-- (ரிக். 2126)
இந்த வரிகள் ரிக் வேதத்தில் சொல்லப் பட்டிருக்கும் வரிகள்... இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தாசர்கள் திராவிடர்கள். இந்திரனாக சொல்லப் படுபவன் ஆரியன்... ஆரியத் தலைவன்.!

வேதங்கள் ஒன்றும் வாழ்வியலையோ, அறிவு பூர்வமாகவோ எதையும் போதிக்க வில்லை... இதை தான் சொல்கின்றன.!
 எல்லோரும் சமம் என்று ஏற்றத் தாழ்வுகள் இல்லா சமூகமாக நம் சமூகம் மாற வேண்டுமானால், முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவைகள், நான்கு  வேதங்கள், மனு சாஸ்திரம், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம்.!