வெள்ளை சர்க்கரையை முடிந்தமட்டும் பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே...
அதில் அதிக கெடுதல்கள் தான் இருக்கிறது. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) குறைக்கின்றன. எடை கூடுகிறது.எதிர்ப்பு சக்தி குறைக்கிறது. இதற்கு பதில் வெல்லம், பனை வெல்லம் பயன்படுத்தலாம். வேலை அதிகமிருக்கும் பரபரப்பில், நாம் எளிதாக இருக்கிறதென்று சர்க்கரையை பயன் படுத்தி விடுகிறோம். அதற்கு ஒரு எளிய யோசனை.
நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் உடைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் போட்டு கரைய விடுங்கள். பாகு பதம் எல்லாம் வேண்டாம். கரைந்து கொதிநிலையை அடைந்தால் போதும். பிறகு ஆறியவுடன் வடிக்கட்டி , ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நான்கு நாட்கள் வரை பயன் படுத்திக் கொள்ளலாம். கேழ்வரகு கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பால், காப்பி, டீ முதலியவைகளுக்கு இந்த கரைசலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்ஜ்ல் வைக்காமல் அவ்வப்போது செய்தல் நல்லது தான் என்றாலும் நம்முடைய அவசர வாழ்க்கை முறையில், எது எளிதானதோ அதை தான் செய்வோம்... உடனே சர்க்கரையை பயன்படுத்தி விடுவோம்...அதற்கு மாற்றாக தான் இந்த முறையை பழக்கப் படுத்திக்க கொள்ளலாம். எப்படியோ சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.!