தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்கள் முதல் முதலாக படிக்கும் வாய்ப்பு என் அண்ணன் மூலம் (என்னுடைய 18- வயதில்) கிடைத்தது... முதலில் படித்த நூல் ' பெண் ஏன் அடிமையானாள் ' என்ற நூல். பிறகு தேடித் தேடி பெரியாரின் அனைத்து நூல்களையும் படித்தேன். எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.. மிகவும் வியப்பாகவும் இருந்தது. இப்படிப் பட்ட ஒருமனிதரை நாம் வேறு மாதிரி நினைத்திருந்தோமே என்ற வியப்பு தான்... ஏனென்றால், எனக்கு தெரிந்த பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமே...!
அதன் பிறகு முடிந்தவரை அவரின் புத்தகங்களை படிப்பேன். திருமணத்திற்கு பிறகு மேலும் அதிகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது... ஏனென்றால் இணையர் வீட்டில் அனைவரும் பெரியார் பற்றாளர்கள்...எவ்வளவு படித்தாலும் எல்லாமே சரி தான்.. கடவுள்மறுப்பு கொள்கைமட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது..அதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை... அந்த நம்பிக்கை அப்படி...!!! :-)
குடும்பத்தில், உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில், சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பேன்.... சிறு சிந்தனை, தொடர் சிந்தனையாக மாறி, கொஞ்சம், கொஞ்சமாக உருப்பெற்று கடவுள் என்ற ஓன்று இல்லை என்ற முடிவிற்கு வந்தேன்....நான் சாமி கும்பிட்டு 22 ஆண்டுகள் ஆகின்றன.!
கடவுள் இல்லை என்ற உண்மை விளங்கிய பிறகு கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு,இணை எதுவுமே இல்லை எனலாம்...என்னுடைய சிந்தனைகள் அனைத்திலும் வேறுபாடு தெரிந்தது.... பெரியாரை முழுவதும் உள்வாங்கி கொண்ட பிறகு, சுயமரியாதை என்ற சொல்லிற்கு உண்மையான பொருள் புரிந்தது.!
" உணவை பங்கிட்டு உண்பது, உழைப்பை பங்கிட்டு செய்வது என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது."
-- தந்தை பெரியார்
.
நம் அறிவாசான் தந்தைபெரியார் அவர்களின் 138-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.! :-)
#பெரியார்138
சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு.!
வாழ்க பெரியார்... வளர்க பகுத்தறிவு.! :-)