Monday, 31 October 2016

சேமிப்பு..


அக்டோபர் -  31, இன்று உலக சேமிப்பு நாளாம்... சேமிக்கும் பழக்கம் இப்போது நம்மில் பலரிடையே இல்லை என்பது தான் உண்மை... கடனில் பொருட்களை வாங்கி சேமிக்கும் முறையை தான் பலர் சேமிப்பாக கருதுகிறார்கள். மாதம் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினால்,  ஐந்து இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி, ஆறு இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி.. சேமிப்பு என்பது இல்லை என்றே பலரின் பதிலாக இருக்கிறது.!

தேவைக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் போய் இப்போது, ஆசைக்காகவும், பகட்டு கௌரவத்திற்காகவும் பொருட்களை வாங்கிக்  குவிகிறார்கள் மக்கள். அலைப்பேசியிலிருந்து, கார் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் இந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை என்று பெருமை பேசும் மக்கள் தான் நம்மிடையே பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.  சம்பாதிப்பதை செலவு செய்துக்கொண்டே இருந்தால், அப்புறம் எப்படி சேமிக்க முடியும் ..? 

நம்மைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளும் அப்படித் தானே இருப்பார்கள்.!

அவசரமாக நமக்கு ஒரு செலவு வந்து விட்டால் கூட மற்றவரை எதிர்பார்க்கும் நிலைமை மிகவும் மோசமான ஓன்று... அப்படி எதிர்பார்த்தும் கிடைக்கவில்லை என்றால் அது அதை விட மோசமான நிலைமையை உருவாக்கி விடும்.!

நம்முடைய வருமானத்தில், ஒரு பங்கு சேமிப்பு என்று எடுத்து வைக்கும் பழக்கம் இன்றியமையாத ஓன்று... நமக்கும் சமயத்தில் பயன்படும். மேலும் ,  நம் நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்கள் சிரமப்படும் போது நம்மால் கொடுத்து உதவ முடியும்.!

 நம்மால் முடிந்தமட்டும் சேமிக்கும் பழக்கத்தை மீண்டும் முறைப் படுத்திடுவோம். வளமான வாழ்க்கைக்கு வித்திடுவோம். பணத்தை கையாளும் முறையில் சேமிப்பு முக்கிய பங்காற்றுகிறது. Money management பற்றிய தெளிவை நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தருவது மிக முக்கியமான வாழ்வியல் ஆகும்.!


பாலின சமத்துவம்.

பொதுவாகவே, ஆண்களுக்கு பெண் தன்னை தான் சார்ந்திருக்கிறாள் என்ற எண்ணமும், பெண்களுக்கு தங்கள் தான் பாதுகாப்பு  .. இல்லையென்றால் அவளின் வாழ்க்கை ஆபத்தில் முடியும் என்ற எண்ணமும் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. பெண்கள் செய்ய சிரமப் படுகிற சில காரியங்களை, விரைந்து செய்து முடிப்பதில் ஆண்களுக்கு  ஒரு பெருமிதம். அதே போல் ஆண்கள் செய்ய சிரமப்படும் செயல்களை பெண்கள் செய்தால், ஆண்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அங்கே ஏகப்பட்ட சமாளிப்புகள் இருக்கும்... ஏனென்றால் நம் சமூகம் அப்படி பழக்கப் படுத்தி  இருக்கிறது.'சாண் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை ' , 'அவனுக்கென்ன ஆம்பள சிங்கம் ' என்று போதை ஏற்றக் கூடிய சொற்றொடர்கள் வேறு .!

பெண்கள் எந்நிலையிலும் தங்களை தாங்களே பாதுகாக்கும் முன்னேற்றம் வர வேண்டுமானால், பெண் விடுதலை, பாலின சமத்துவம் மிக முக்கியம். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் இந்த பாலின சமத்துவம் என்றால் என்ன  என்பதை தெளிவுப் படுத்தப்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம். இதனை  நம் வீட்டிலிருந்து ஆரம்பிப்பது நல்ல முறை... அப்பா, முக்கியமாக அம்மா  குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பிறகு பள்ளிக்கூடம், ஊடகங்கள் என அனைத்தும் இதில் பங்கெடுத்தால்,  வரும் தலைமுறையினர்  இந்த சமத்துவத்தை நிலைநிறுத்த முடியும் என்பது உறுதி.!

Friday, 21 October 2016

அடுத்த தலைமுறையினர்.

நம்மிடையே திணி்க்கப்பட்ட ஜாதீய முறை, சமூக நீதி மறுப்பு, மூடநம்பிக்கை, கடவுள் பற்றிய கற்பனை, பெண்ணடிமைத்தனம் போன்ற உண்மைகளை பெரியவர்களிடம் கூறுவதை விட வளர்ந்து வரும் சிறுவர், சிறுமிகளிடம் விளக்கினோமானால், உட னே புரிந்துக் கொண்டு , தங்களின் சந்தேகங்களைக் கேட்கிறார்கள்...மேலும் செயல்முறைப் படுத்துகிறார்கள்.! :
நம்முடைய இலக்கு அடுத்த தலைமுறையினரை பகுத்தறிவுவாதிகளாக மாற்றுவதிற்கான முயற்சியாக இருக்கட்டும்.!!

குழந்தைகளை கையாளுதல்

இன்று காலை கடையில் காய்கறி வாங்க காத்திருந்த போது, பத்து வயது டைய சிறுவன் ஒருவன் அவசரமாக வந்து, உருளைகிழங்கு சிப்சு பாக் கெட் கேட்டான். கடைகாரர் இல்லை என்று சொன்னவுடன் அச்சிறுவனின் முகம் வாடி போனது. 
உடனே நான் , " கடலை உருண்டை வாங்கி சாப்பிடலாமே..." என்றேன்.
அதற்கு அவன் நான் என்னவோ சொல்லகூடாததை சொன்ன மாதிரி என்னை ஏற, இறங்க பார்த்தான். " உனக்கு நல்லா ஓடி,ஆடி விளையாடுறது பிடிக்குமா... இல்லை வீட்டிலேயே கம்யூட்டர் கேம் விளையாடிட்டு,தூங்கறது பிடிக்குமா..." 
என்றேன்.
உடனே அவன் சிறு புன்முறுவலுடன் , " வெளியில் விளையாடப் பிடிக்கும் " என்றான். அப்படினா, " நீ கடலை உருண்டை, எள் உருண்டை சாப்பிடணும்... அப்ப தான் டையர்டு இல்லாம, நல்லா சுறுசுறுப்பா விளையாடலாம்... சிப்சு எல்லாம் சாப்பிட்டா மந்தமா இருக்கும்....தூக்கம் தான் வரும் " என்று நான் சொன்னதும், சில வினாடிகள் சிந்தித்து விட்டு, " அண்ணாச்சி, எனக்கு கடலை மிட்டாய் கொடுங்க..." என்று கேட்டு வாங்கிக் கொண்டு, என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டே ," thanks aunty" என்றான்.!
குழந்தைகள் என்றும் இனிமையானவர்கள் .... அறிவானவர்கள்....நாம் தான் அவர்களை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.!

#RSS_INDIAN_ARMY

இந்திய இராணுவத்திற்கே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளித்திருக்கிறதாம்..... பாகிஸ்தான் சர்ஜிகல் ஸ்டிரைக் வெற்றி பெற்றதிற்கு RSS யின் திறமையான பயிற்சி தான் காரணமாம்.....சொல்பவர் யார் தெரியுமா...பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்.!!!
பயங்கரவாதத்தின் காரணமாக மூன்று முறை அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறதென்று , மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்கிறார் என்றால், என்ன ஒரு பயங்கரவாதம் இது..!
பயங்கரவாதமே அரசாக செயல் படுகிறது.... இந்த பரந்தப்பட்ட இந்திய தேசத்தில்...!!!