Friday, 23 December 2016

ஊழலும், மதவாதமும்

இவ்வளவு அவசரகதியில் அதிமுக-வின் ஊழல்களை தோண்டி எடுக்கும் பா.ஜ.க. , தங்களின் வியாபம் பற்றியோ, அமித்ஷாவின் 500 கோடி, பாபா ராம்தேவிற்கு நிலங்களாகவும், கோடிக்கணக்கில் பணத்தையும் வாரி வழங்கியதைப்  பற்றியோ, சுத்தப் படுத்தவே முடியாத கங்கைக்கு ஒதுக்கிய நிதி பற்றியோ, இன்னும் எவ்வளோவோ இருக்கிறது.. சொல்லிக் கொண்டே  போகலாம்...  அதை பற்றியெல்லாம் ஒரு பேச்சுக்கு கூட மூச்சு விடவில்லையே...!


தன கட்சி ஆளும் மஹாராஷ்டிராவிலோ, ராஜஸ்தானிலோ, அரியானாவிலோ, மத்தியபிரேசத்திலோ உள்ள தலைமை செயலாளர் வீட்டில் இம்மாதிரி துணை ராணுவத்துடன் நுழைந்து ரெய்டு செய்யும் துணிவு உண்டா... கட்சி தலைமைக்கு ...?

நான் ஏதோ ஊழலுக்கு ஆதரவாக, அதிமுகவிற்கு  பேசுவதாக நினைக்க வேண்டாம்... ஊழல் தடுக்கப்பட வேண்டும்... ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று  கருத்து இல்லை.  பெரியரியலை படித்தவர்களுக்கு கட்சி பேதமின்றி, சமூகம் பற்றிய கண்ணோட்டம் மட்டுமே இருக்கும்.

 'ஒட்டு அரசியல் செய்பவர்களுக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய கவலை, நமக்கோ அடுத்த தலைமுறைப் பற்றிய கவலை .' 

என்று அய்யா அவர்கள் சொன்னது போல் எங்களுக்கு அடுத்த தலைமுறை பற்றிய கவலை தான்.!

 ஊழலை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் தங்களுக்கு ஒரு நிரந்தரமான இடத்தை பெற முயற்சி செய்கிறது பா.ஜ.க.!

மத்தியில் ஆட்சியை பிடித்ததும் இதே முறையில் தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. ஊழலா, மதவாதமா, என்றால் மக்களின் கவனம் ஊழலின் மேல் தான் திரும்பும்... அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. தங்கள் கட்சி ஊழலில்லா கட்சி என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஊழலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. .. தாங்களே உரிய மதவாத அரசியலுடன்...!

மண் சார்ந்த மரங்கள்.

சில தினங்களுக்கு முன் பண்பலை அலைவரிசை ஒன்றில் , பூவுலகின் நண்பர்கள் அமைப்பை  சேர்ந்த தோழர் சுந்தரராசன் அவர்களின் செவ்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.!

அதில் மிக முக்கியமாக அவர் சொன்னதை இங்கு தருகிறேன். ' சில தினங்களுக்கு முன் வந்து சென்னை மக்களை ஒரு புரட்டு புரட்டிப்போட்ட வர்தா புயலினால் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை நம் மண்சாரா வெளிநாட்டு மரங்கள் தானாம். அழகான மலர்களுக்காகவும், சீக்கிரம் வளர்கிறது என்பதற்காகவும் நடப்பட்ட மரங்கள் தான் அவைகள்.!'.

நம் மண்ணுக்கேத்த மரங்களான அரசமரம், வேப்பமரம், புளியமரம், மாமரம், கொய்யாமரம் போன்றவை அடியோடு சாயவில்லை ... கிளைகள் மட்டும் முறிந்திருக்கின்றன என்பது வியப்புக்குரிய உண்மை.!
இனிமேல் நடப்படும் மரங்களையாவது , நம் மண் சார்ந்த மரங்களாக நடுவோம்... நண்பர்களே.!


மனிதம்

பிறருடைய வலிகளை கேட்கும் போதோ, பார்க்கும் போதோ மனம் கனமாவதை உணர்கிறீர்களா... குரல் எழ மறுக்கிறதா...கண்களில் கண்ணீர் முட்டுகிறதா... அப்படியென்றால், நீங்கள் மனிதனாக பிறந்ததின் பயனை உணர்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.!

 மனிதம் உங்கள் உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கிறது ...மெய்யன்பு உங்களுக்குள் நிரம்மி வழிகிறது... அதை மென்மேலும் செம்மைப் படுத்த முயற்சி செய்யுங்கள்.!

அன்பை விட, மனிதத்தை விட இவ்வுலகில் வேறு எதுவும் பெரிதில்லை.!!!

ஜெயலலிதா என்னும் ஆளுமை

கொள்கைகளில் , அரசின் செயல்பாடுகளில் பல மாறுபாடுகள் இருந்தாலும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா 
அவர்களின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும். !

ஆணாதிக்க சமூகமான இச்சமூகத்தில், ஒரு தனி பெண்ணாக பல வெற்றிகளை சாதித்து காட்டியுள்ளார். அவரின் துணிச்சல், ஆளுமை, விடாமல் முயலும் போர்க்குணம் முதலியவை அசாத்தியம்.!

அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரில்லாமல் இன்று அவர் சார்ந்த அதிமுக கட்சி வேர் இல்லாத மரமாக தான் இருக்கிறது.!

அவருடைய அரசியல் வாழ்வில் பல இன்னல்களை சந்திருந்தாலும், மிகவும் சாமார்த்தியமாக எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார் என்பது உண்மை.!

ஒரு பெண்ணாக அவரின் ஆளுமையை மிகவும் மதிக்கிறேன்.! 

Friday, 2 December 2016

சென்னை மழை 2015

கடந்த ஆண்டு இதே டிசம்பர் . 2 - ந்தேதி சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்ததை  யாராலும் மறக்க முடியாது...இதே நாளில்  தானே வெள்ளம் ஆறாக ஓடியது. மக்கள் பட்ட சிரமங்களை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ... தண்ணீர் மயம் தான்.!

தொலைக்காட்சியிலும், வானொலியிலும், இணையத்திலும் சென்னை வெள்ளத்தைப் பற்றிய பேச்சு தான்... அந்த நேரத்தில் சென்னை மக்கள்  ஜாதி, மதம், மொழி கடந்து ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொண்டதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.!


எல்லோருமே ஏதாவது ஒருவகையில் உதவுகிறார்கள் .. நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது என்பது உண்மை. அது இயலாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன்.
வீட்டில் வயதானவர்கள் ... மேலும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான உறவினர்கள் எங்கள் இல்லத்திற்கு  வந்திருந்தனர். அவர்களையும் சேர்த்து கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.!

மறக்கமுடியாத மழை டிசம்பர் 2015 மழை...  பல உயிரிழப்புகள், உடைமை இழப்புகள்...!  :-( :-(

எத்தனை இழப்பு இருந்தாலும், மனிதநேயத்தை வளர்த்த, அன்பை பகிர்ந்த நல்உள்ளங்களுக்கு நன்றி .. நன்றி... நன்றி .! :-) :-)