தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி போனது கலை ... தெருக்குத்து ஆரம்பித்ததிலிருந்து இன்றைய தமிழ்சினிமா வரை நம் ரசனைக்கு சிறந்த விருந்து கொடுத்திருக்கிருக்கிறார்கள் நம் கலைஞர்கள் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு நாம் கலையுணர்ச்சி உடையவர்கள்.
ஆரம்பகாலத்தில் தெருக்குத்து எல்லாமே வாய்வழி வந்த கதைகளாக தான் இருந்தன. பிறகு தான் இதிகாசம்,புராணம் என்று கதைக்களம் உருவானது... அதன் பிறகு தேசியப்பற்றை விளக்கும் நாடகங்கள் போடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தான், இருபதாம்நூற்றாண்டில், கலைவாணர் என்எஸ்கே மற்றும் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் நாடகங்கள் பகுத்தறிவு பேசின. பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி அவர்களின் நாடகங்கள் மென்மேலும் திராவிடக்கொள்கைகளை மெருகேற்றின என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.!
#சமகாலத்தியதமிழ்சினிமாவும்அரசி யலும்
இந்த புத்தகத்தை பத்திரிகையாளர் சே.த. இளங்கோவன் எழுதியுள்ளார்.
தற்போதைய தமிழ் சினிமாவில் உள்ள நிறை, குறைகளை நனவு அலசி ஆராய்ந்து ஒரு புத்தகமாக ஆக்கியுள்ளார்கள். தோழர் இப்புத்தகத்தை கொடுத்து இரு மாதங்களுக்கு மேல் இருக்கும். மன்னிக்கவும் , தோழர். இரு வாரங்களுக்குமுன் தான் படித்து முடித்தேன். மிக அருமையான புத்தகம்.
" தணிக்கை கட்டுப்பாடு இல்லாமல் சினிமா எடுக்க வாய்ப்புக்கிடைத்தால், திராவிட நாட்டை எளிதில் பெற்றுத் தருவேன்."
என்று அண்ணா சொன்னதையும்,
" மக்களின் அரசியல் உணர்வை மேம்படுத்தும் கருவியாக சினிமாவை பயன்படுத்தலாம் "
என்று சோவித் புரட்சியாளர் லெனின் கூறியதையும் இங்கே மேற்கோட்டிட்டு காட்டியுள்ளார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.!
' விசாரணை' யில் தொடக்கி, ' புலி' வரை விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுளள்ன. அனைத்தும் மிகச்சிறந்த விமர்சனங்களாக இருக்கின்றன. விசாரணை, கபாலி, அப்பா, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, புறம்போக்கு, தங்கல், மாவீரன் கிட்டு, காக்கா முட்டை, இறுதிச்சுற்று, பசங்க 2, ஜோக்கர், பாபநாசம், குற்றமே தண்டனை, ஆகிய திரைப்படங்களுக்கு தக்க உதாரணங்களுடன் பாராட்டி இருக்கிறார். அதே சமயம், அதிலுள்ள சில குறைகளையும் சுட்டிக்காட்டியுளளார். எடுத்துக்காட்டிற்கு, கபாலியில், எல்லாமே சிறப்பு என்றாலும், ஒரு காட்சியில் அண்ணலை காட்டி இருப்பது போல் தந்தை பெரியரையும் காட்டியிருக்கலாம் ... எதற்காக என்றால், 1950 களிலேயே தந்தை பெரியார் மலேசியா சென்று பல இடங்களில் பல கூட்டங்கள் போட்டு பேசியிருக்கிறார்கள். அந்த மக்களின் வரலாற்றை எடுக்கும்போது , தந்தை பெரியார் படமாவது நிச்சயம் இடம் பெற்றிரூக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல்,
' ரெமோ' வில் காட்டிய ஆணாதிக்க மனப்பான்மையும்,ன் பெண்ணடிமைத்தனமும்,
' புலி ' யில் கதாநாயகிகள் வெறும் காட்சிப்பதுமைகளாக வந்து போனதையும், முதிராத கிராபிக்ஸ் பற்றியும்,
' கொம்பன்' இல் படம் முழுக்க ஜாதிவெறியினை பச்சப்படுத்தி இருப்பதையும் ,
விமர்சிக்க தவறவில்லை.
அனைத்து விமர்சனங்களும் எனக்கு பிடித்தவைகளாக இருப்பினும், ஆசிரியரின் குரலாக , இங்கே நான் குறிப்பிட விரும்பும் ஒரு கருத்து,
" நாயகிகளை டூயட் பாடுவதோடு மட்டும் முடித்து கொள்ளாமல், வலிமையான் பெண் கதாபாத்திரங்களைப் படைக்கும்போது தான் தமிழ்சினிமா அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும்.! "
அருமையான அலசல், சிறப்பான விமர்சனங்கள் ... இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்த்துகள் தமிழ்... :-)
புத்தகம் - சமகால தமிழ் சினிமாவும், அரசியலும்.
ஆசிரியர் - பத்திரிகையாளர் சே.த. இளங்கோவன்
வெளியீடு - சாமுராய் வெளியீடு
விலை - ரூ. 90/-