இன்று போல் தான் நாளையும் என்பது தான் நம் நிலைப்பாடு என்ற போதிலும், ஒவ்வொரு நாளும் முடியும்போது, அந்த நாளை நினைத்து பார்ப்பதும், மறுநாளை பற்றிய முன்னேற்பாடுகள் குறித்து சிந்திப்பதும் போன்றது தான் , ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அதனைப்பற்றிய நினைவுகள்.!
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், நமக்கு புது புது அனுபவங்கள் கிடைக்கும் இல்லையா... இந்த ஆண்டில் நிறைய புதிய மனிதர்களை சந்தித்து இருப்போம். புதிய நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். நம்பி இருந்த சிலமனிதர்களை பற்றிய தெளிவு கிடைத்திருக்கும். சில நினைவுகள் மகிழ்ச்சியையும், சில நினைவுகள் துக்கத்தையும், சில நினைவுகள் வெறுப்பையும், விரக்தியையும் கொடுத்திருக்கும். ஆனால், எல்லாமே அனுபவங்கள் தான். ஒவ்வொரு நொடியும் நாம் கற்றுக்கொண்டு தானே இருக்கிறோம்.!
நல்ல அனுபவம், இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்பதையும், கெட்ட அனுபவம், இதை இப்படி செய்யகூடாது என்பதையும் தானே நமக்கு அறிவுறுத்துகிறது. ஆதலால், எல்லா நேரமும்,நாட்களும், மனிதர்களும், நண்பர்களும்,உறவுகளும் நமக்கு அனுபவத்தை கற்றுத்தருபவர்களாக தான் இருக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் அடுத்த ஆண்டை எதிர்நோக்க தயாராகுவோம்.!
#Welcome2018