" என்ன .. இந்த காலத்துல போய் ஜாதி பேரெல்லாம் சொல்லிக்கிட்டு.."
" அதனாலென்ன ... அண்டை மாநிலத்திலுள்ள பெண்கள் எல்லாம், ஷில்பாஷெட்டி, சமீராரெட்டி என்று வைத்து கொள்ளவில்லையா,நாம மதர் ஸ்டேட்ல இருந்துகிட்டு வைச்சிக்கலைனா எப்படி.."
இப்படி ஒரு வசனத்தைகடந்த இரு நாட்களாக பண்பலையில், ஒரு திரைப்படத்திற்கான விளம்பரத்தில் கேட்கிறேன். " மன்னர் வகையறா" என்ற படம் தான் அது. !
இந்த வசனம் மேற்கொண்டு பேசப்படுகிறதா என்று தெரியவில்லை. பேசப்படவில்லையென்றால், படத்தின் இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை வசனம் என அனைவரின் மீதும் நமக்கு வருத்தம்,கோவம் வருகிறது. இல்லை,விளம்பரத்தில் தான் வெட்டப்பட்டு ஒலிப்பரப்பப்படுகிறது என்றால், இவர்களின் மீது நாம் கடும்கோபம் கொள்ள தான் வேண்டும்.!
கிட்டத்தட்ட இரு தலைமுறைகளாக , தந்தை பெரியாரின் கடும் உழைப்பினால், அறிவுபெற்று, இந்த ஜாதி பட்டத்தை தவிர்த்து வந்திருக்கிறோம். இந்த நிலையில், மறுபடியும், இந்த ஜாதிவெறியை தூண்டும் விதமாக ஜாதிப்பெயரை போட்டுக்கொள்ளும் முறை மீண்டும் வருகிறதென்றால், சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற எண்ணங்களை மக்கள் மனதில்புகுத்திவிடவேண்டும் என்று சில ஜாதி வெறியர்கள் செயல்படுகிறார்கள். ஒரு நகைச்சுவை, விளையாட்டிற்கு கூட,இம்மாதிரி சொல்லாடலை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றால், இந்த ஊடகங்கள் இருந்து தான் என்ன பயன்...???
திரைப்படங்கள் மக்களை எளிதில்சென்றடையும் ஒரு ஆற்றல் வாய்ந்த ஊடகம். இதில், நல்லதை சொல்லிக்கொடுக்கவில்லை என்றால்கூட பரவாயில்லை... இந்த சமூகத்திற்கு, இதுபோல கெடுதல் செய்யாமலாவது இருக்க கூடாதா...!!!
என் தாத்தா ஜாதியை தன பெயருடன் ஜாதி பெயரையும் சேர்த்து போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், என் அப்பா, என் அண்ணன் போட்டுக்கொள்ளவில்லை. மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது . அவர்களுக்கு ஜாதிபற்றிய தெளிவை உண்டாக்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தவரை,உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும், இதைப்பற்றி உரையாடுகிறோம். ஆனால், இதுபோன்ற திரைப்படங்கள் நம் சமூகத்தை சீரழிக்கப்படுவதற்காகவே வருகின்றன. சென்சார் போர்ட்டு என்ற ஓன்று இருக்கிறதே, இவைகளை வெட்டாமல், தேவையில்லாத ஆணிகளை மட்டும் பிடுங்கும்.!
இனி, யாரையும் நம்பிக்கொண்டிராமல், நம் வீட்டிலிருந்தே சமூக மாற்றத்தை, சீர்திருத்தத்தை ஆரம்பிப்போம் ...நண்பர்களே.!