" என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமையடைகிறேன்."
இன்று கலைஞர் தொலைக்காட்சியில், உண்மையிலுமே "தேனும்,பாலும்" தான்... :-)
ஆரம்பமே,
" தமிழுக்கும் அமுதென்று பேர் ...
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..."
என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இனிமையான பாடல்.
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..."
என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இனிமையான பாடல்.
அடுத்து,
"சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு... "
அதுவும் பாவேந்தர் பாடல்.
மூன்றாவதாக,
" அகர முதல் எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி,
ஆதிபகவன் முதல் என்றே உணர வைத்தாய் தேவி,
இயல், இசை, நாடக தீபம் ஏற்றி வைத்தாய் ...
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் நீயே... "
அருமையான பாடல், உயிர் எழுத்துகளை வைத்து எழுதப்பட்ட அழகான பாடல் வரிகள், நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பு, டிஎம்ஸ் அவர்களின் கணீரென்ற குரல் ... அருமையிலும் அருமை. (என்ன ஒரே ஒரு குறை என்றால், இல்லாத கல்விக்கடவுள் என்று சொல்லப்படும், சரஸ்வதி முன்பு பாடப்பட்டது தான்.... :-p )
அடுத்து,
அழகே, தமிழே, நீ வாழ்க ...
அமுதே, உந்தன் புகழ் வாழ்க ...
என்ற ஒரு பாடல். இதுவரை பார்த்ததில்லை,கேட்டதுமில்லை. பாடகர். சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஆரம்பத்தில் பாடுகிறார். அப்புறம் மலையாளம், கன்னடம் , தெலுங்கு என்று திராவிட மொழிகளில் வரிகள் உள்ள ஒரு பாடல். இதற்கு முன்பு, #பாரதவிலாஸ் படத்தில் பார்த்திருக்கிறேன், ஒருமைபாடு பாடலை...
இப்படி ஒரு பாடல் இருப்பது இன்று தான் தெரிய வந்தது.
தம்பிகள் கேட்டால், வந்தேறி பாடல் என்று சொன்னாலும் சொல்வார்கள்.! :-)
இப்படி ஒரு பாடல் இருப்பது இன்று தான் தெரிய வந்தது.
தம்பிகள் கேட்டால், வந்தேறி பாடல் என்று சொன்னாலும் சொல்வார்கள்.! :-)
உண்மையில், பரபரப்பான காலைநேரத்தில், அரைமணிநேரம் எல்லாப் பாடல்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து, கேட்டது மனதிற்கு இதமாக இருந்தது.!
இன்று உலக தாய்மொழி தினமாம். காலையின் தொடக்கமே அருமையாக இருக்கிறது என்று தோன்றியது. ஹலோ எப்.எம். பண்பலையில், காலை நி கழ்ச்சியின் ஆரம்பத்தில், தாய்மொழி தினத்திற்காக, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப் பட்டது. பண்பலை ஆகட்டும், தொலைக்காட்சிகள் ஆகட்டும்... இம்மாதிரி, தினங்களை மக்களிடம் பொய் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஊடகங்களுக்கு நம்முடைய வாழ்த்துகள் உரித்தாகுக..(கேட்டது, பார்த்தது இவைகள் இரண்டு தான் ... மற்ற அலைவரிசைகள் பற்றி தெரியவில்லை... ஒலி(ளி )ப் பரப்பி இருந்தால், அவர்களுக்கும் நம்முடைய அன்பும், வாழ்த்தும், நன்றியும்.!
இந்த நாளில், குறைந்தபட்சம், வீட்டில், குழந்தைகளிடம், நம் தாய் மொழியான , தமிழ் மொழியில் பேசுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம், நம் மொழியைப பற்றி அவர்களுக்கு விளக்கி நல்ல புரிதலை உண்டாக்குவோம், மிக முக்கியமாக, தமிழைப் படிக்க வைப்போம். பிற மொழிகள் கற்றாலும், தாய்மொழியின் மகத்துவத்தை சொல்லி, மொழிப்பற்றை உருவாக்குவோம். கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய உண்மைகளை எடுத்து சொல்வோம். மொழிப்பற்றின் மூலம் தான் இனப்பற்றை உருவாக்கிட முடியும். செய்வோமா ... நண்பர்களே.!
#உலக தாய்மொழி தினம்.
#வாழ்க தமிழ்