' போராட்டம் வெற்றி என்று எப்படி சொல்கிறீர்கள், காவேரி நீர் கிடைத்தா விட்டது ...? '
இந்த கேள்வியை ஒருவர், இருவர் அல்ல... பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள். அவர்களைப் போன்றோர்களுக்கான பதிவு இது ...
கடந்த 5-ஆம் தேதி திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, வணிக சங்கங்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களே, தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்பதை கூட, பொருட்படுத்தாமல், இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள், தங்களின் ஆதரவை முழு மனதுடன் அளித்திருக்கிறார்கள் என்றால், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை, முடிவை, விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தானே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட வெற்றிக்கு வேறன்ன வேண்டும். !
இந்த போராட்டத்திற்குப்பிறகு தானே, கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ், தன்னுடைய அமைப்பைத் திரட்டி, வாரியம் அமைக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு போர் தொடுக்கிறது(!) என்றும் போராட்டம் நடத்தினார். கர்நாடக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் வாரியம் அமைக்கக்கூடாது என்று வெளிநடப்பு செய்தார்கள். கர்நாடக முதல்வர், மத்திய அரசு, தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு பணியக்கூடாது என்று அறிக்கை விடுத்தார். கர்நாடகத்திற்கு இந்த அச்சம் வருவதற்கான முழு காரணம் இந்த போராட்டம் தானே. ஆளும் அதிமுகவினர் உண்ணா(!)விரதம் இருந்தார்களே ... 15 நாட்களுக்கு மேல் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதே, அப்போதெல்லாம் இல்லாத அச்சம் இப்போது மட்டும் வருவதற்கான காரணம் என்ன..!
தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக ஒரு மாயையை பாஜக ஏற்படுத்த முயன்ற , சூழ்ச்சி உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறதே...!
இப்போதாவது சிந்தியுங்கள் ... திமுக எதை செய்தாலும் குறைகூறும் மனப்பான்மையை விட்டு வெளியில் வாருங்கள் ... நண்பர்களே.!
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை, அனைத்து மனத்தடைகளையும் நீக்கிவிட்டு , எல்லோரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுப்போம்.!
#We_want_CMB