தற்போதைய நாட்களில், கொண்டாட்டங்கள் என்பது யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கொண்டாட வேண்டும் என்பதே பெரிய விசயமாகி வருகிறது. கொண்டாடுவதற்கு நாள், கிழமை என்று தேவையில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூட கொண்டாடலாம். இதற்கு எதற்கு ஒரு வருட காத்திருப்பு? என்பவர்கள் சிலருண்டு.!
கொண்டாட்டம் என்பது குறிப்பிட்ட நாளில் வரும் போது, அது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பரபரப்பான அன்றாடசூழலில், ஒரு மாற்றத்திற்கான ஏக்கம் மனதை ஆக்கிரமிக்கும்போது , திடீரென்று ஒரு சிறப்பான நாள் வருகையில் மனம் மகிழ்கிறது. அதனால், அவ்வப்போது வரும் சிறப்பான நாட்களை கொண்டாடுவதில் தவறில்லை என்பவர்கள் பலருண்டு.!
இந்த இரு வகையினருமே , அவரவர்கள் இருப்பில், மனதளவில் பக்குமடைந்தவர்கள் தான். கொண்டாட்ட மனநிலை என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் ஒன்றாக தான் இருக்கிறது. அறிவிற்கு புறம்பாக, மூடநம்பிக்கைகளை விதைக்காமல் மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதில் தவறில்லை. அதனால், கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. நம் வசதிக்குட்பட்டு, கொண்டாட்டங்கள் இருக்குமேயானால், அவை நமக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தான் தரப்போகிறது. வாழ்க்கையே கொண்டாடுவதற்கு தானே!
கொண்டாட்டங்களில் பலவகைகள் உண்டு.
1. தான் மட்டுமே கொண்டாடி மகிழ்வுடன் இருப்பது.
2. தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைப்பது.
3. தன் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கொண்டாட்டமாய் இருந்து மகிழ்வது.
4. தான் சார்ந்திருக்கும் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடுவது.
5. ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள், இச்சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கிவைக்கப்பட்டவர்கள் என்பவர்களுடன் சேர்ந்து கொண்டாடி, மகிழ்ந்து மனநிறைவு அடைபவர்கள்.
இதில், 5-வதாக குறிப்பிட்டவர்கள் , மிகச்சிறந்த மனநிலையில் இருப்பவர்கள். என்றைக்கும், மனிதத்தை கொண்டாடி மகிழ்வுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து,மற்றவர்களையும் வாழ வைக்கக் கூடியவர்கள்.!
#வாழ்தல்இனிது
#Welcome2019