" எலெக்சன் வருதே ... நீங்க யாருக்கு ஒட்டு போடுவீங்க ..."
" அது வந்து அக்கா ... ஹி ஹி .."
" பரவாயில்ல .. சொல்லவேண்டா, ஆனா மோடிக்கு மட்டும் போட்டுராதீங்க..."
" சே, சே .. நீங்க வேற அக்கா, நான் எப்பவும் ரெட்டைஇலைக்கு தான் போடுவேன் ..."
நான் அதிர்ச்சியாகி,
" ஐயையோ.. மோடியோட தான் ரெட்டை இலை சேர்ந்திருக்கு... அங்கே போட்டாலும், மோடிக்கு தான் ஜெயிப்பார்.."
" அப்படியா அக்கா... எனக்கு தெரியாதே, அதான் எங்க வூட்டுக்கார் கமலுக்கு போடசொன்னுச்சோ..." ( அப்பாவியாக... )
" கமலுக்கு போட்டாலும் , எலெக்சனுக்கு பின்னாடி மோடிக்கு போக வாய்ப்பிருக்கு... எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்போது ரெட்டைலைக்கு போட்டீங்க .. சரி, இப்ப இருக்குற நிலையில நீங்க உதயசூரியனுக்கு போட்டா மட்டும்தான் நாடு உருப்படும். இல்லையான, நாளைக்கு நம்ம பிள்ளைங்க படிக்க முடியாது, பொண் குழந்தைங்க பாதுகாப்பா இருக்க முடியாது, ஏழைங்க வாழ முடியாது ... நாம போடுற ஓட்டு தான் நாட்டை ஆளுற தலைவரை முடிவு செய்யும்... அதனால நல்லா யோசிச்சு ஒட்டு போடுங்க ..ப்பா..."
" சரி அக்கா, நீங்க சொன்னபிறகு தான் கொஞ்சம் புரியுது... நமக்கு வேலையே சரியா இருக்கு ..இதையெல்லா யார் நமக்கு சொல்றா... "
" இனிமே, எவ்வளவு தான் வேலையானாலும்,ஓட்டு போடுறப்ப யோசிச்சி போடுங்க ..."
இன்று காலை எங்கள் குடியிருப்பில் வேலை செய்யும் சகோதரி ஒருவருடனான உரையாடல் இது!
அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற செய்தி கூட தெரியாமல் நம் மக்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அனைத்து தன்னதிகார அமைப்புகளையுமே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தும் பாஜக, மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடும்!
அமமுக, மக்கள்நீதிமய்யம் உட்பட திமுக கூட்டணிக்கு போடாத ஓட்டுக்கள் அனைத்தும் பாஜகவை ஆதரிக்கும் ஓட்டுகளாகவே மாற வாய்ப்பிருக்கிறது. இருக்கும் இந்த குறுகிய காலகட்டத்தில், மக்களிடம் இந்த செய்தியை, தற்போதைய அரசியல் நிலவரங்களை கொண்டுபோய் சேர்ப்பதில் நம்முடைய பணி தலையாய இடத்தை பெறுகிறது!